ஏழை கல்லூரி மாணவன் கனவை நினைவாக்கிய நடிகர் K. P. Y. பாலா !

ஏழை கல்லூரி மாணவன் கனவை நினைவாக்கிய நடிகர் K. P. Y. பாலா  !

Actor K. P. Y. Pala 

ஏழை கல்லூரி மாணவருக்கு பைக் வாங்கி தந்த நகைச்சுவை நடிகர் பாலா நெகிழ்ச்சி அடைந்த அஜித் பாலாவை கட்டித் தழுவி நன்றி கூறினார்.
மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் பாட்டி வீட்டில் தாய் தம்பி உடன் வசித்து வரும் அஜித் என்னும் கல்லூரி மாணவன் இவர் மேல்மருவத்தூர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் தாயின் பாரத்தை குறைக்க கல்லூரி மாணவன் அஜித் படிப்பு முடிந்த பிறகு பகுதி நேர வேலையாக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். அப்பொழுது பெட்ரோல் போடுவதற்கு ஒரு நபர் வந்திருந்தார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கேமரா பொருத்தப்பட்டிருந்து. அதைப் பார்த்த அஜித் அதனுடைய விலையை கேட்டார். அப்பொழுது அவர் 45 ஆயிரம் என கூறிய பொழுது உடனே தன்னறியாமல் பைக் ஓட்டுனரிடம் எனக்கும் பைக் வாங்கி ஓட்ட வேண்டும் என ஆசை தான் இருந்தாலும் எங்கள் வீட்டில் காசு கேட்டால் திட்டுகிறார்கள். சைக்கிள் வாங்குவதற்கு கூட என்னிடம் வழியில்லை என தனக்குள் உள்ள ஆசையை அவரிடம் கூறியுள்ளார். இதை கேமராவில் பதிவு செய்த நபர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த சமூக வலைதள பதிவை பார்த்த சின்னத் திரை நடிகர் பாலா, இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சமூக வலைதள பதிவில் பார்த்த மாணவன் வேலை செய்யும் பெட்ரோல் பங்கில் அவரிடமே பெட்ரோல் தான் புதியதாக கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப சொல்லி பிறகு அவர் அணிந்திருந்த தலைக்கவசத்தை எடுத்து வாகனத்தினுடைய சாவியை அந்த மாணவனிடம் கொடுத்தார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த அஜித் பாலாவை கட்டித் தழுவி நன்றி கூறினார்.

Tags

Next Story