"வெத்தலை போட்ட சோக்குல" பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்

வெத்தலை போட்ட சோக்குல பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக் தேர்தல் பிரசாரம்

வெத்தலை போட்ட சோக்குல பாட்டை பாடி உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக நாராயணசாமி இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

.இவரை ஆதரித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது : தேசமும் நாடும் நம்முடைய நாடும் நல்லா இருக்க வேண்டும் என்றால் நாம் இரட்டை இலையில் 39 பிளஸ் 1 40 ஜெயித்தே ஆக வேண்டும.; யாரையும் குறை கூறி வாக்கு சேகரிப்பவன் நான் அல்ல. ஆனால் உண்மையைத்தான் கூற வேண்டும். நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். வரட்டும் .இதுவும் இந்தியா தானே. வெள்ளைக்காரன் ஆட்சி இல்லை. நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தெய்வங்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவங்க யோசிச்ச இந்தியா. இது இல்லை. அந்த இந்தியா நமக்கு வேண்டுமென்றால் முன் உதாரணமாக தமிழகம் விளங்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்.

இதுவரை மத்தியிலே மெஜாரிட்டி கூடுதலாக இருந்தும் ஒன்றும் செய்யவில்லை. 40 தொகுதிகளில் நாங்கள் ஜெயித்து விடுவோம் என கூறுகின்றார். இதுவரை ஒன்றும் பண்ணவில்லை. இதுவரை மக்களுக்கு என்ன பண்ணீங்க. நிவாரண பணமே வரவில்லை. ஆனால் நான் என்ன சொல்கின்றேன் என்றால் இங்கே இருந்து விரட்டி அடிப்போம். மக்கள் நலனுக்காக பதவியில் இருந்து நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்றால் அவர்களுடைய ராஜ்ஜியம் என்பது பூஜ்ஜியம் தான்.

அந்த நாற்காலியில் அமர அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அந்த அதிகாரத்தை நாம் அவர்களுக்கு வழங்கக்கூடாது. அதற்காகத்தான் நாம் ஜெயிக்க வேண்டும். நம்மளுடைய குழந்தைகளுடைய எதிர்காலம் என்ன ஆவது. கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்பதெல்லாம் பொய். சைனாக்காரன் ஊடுருவி விட்டான். நீங்கள் பதவியில் தான் இருந்தீர்கள். அதனால்தான் சொல்கின்றேன் அத்தனை இடங்களிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றவரிடம் கூடியிருந்த மக்கள் பாட்டு பாடச்சொல்லி கேட்க வெத்தல போட்ட சோக்குலாதான் என அமரன் படத்தில் அவர் பாடிய பாடலை ராகத்துடன் பாடினார்.

Tags

Next Story