நடிகர் கார்த்திக் குமார் விவகாரம்: பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை

நடிகர் கார்த்திக் குமார் விவகாரம்: பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை

பாடகி சுசித்ரா

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடுக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்தார். தன்னை பற்றியும்,

தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story