சிவகாசி அருகே நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரை

சிவகாசி அருகே நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரை

  சிவகாசி அருகே இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரை செய்தார். 

சிவகாசி அருகே இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரை செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் தேவர் சிலை அருகே இண்டியா கூட்டணி கட்சியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கதாகூரை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை ஆற்றிய நடிகர் கருணாஸ், இந்த தேர்தல்,மிக முக்கியமான தேர்தல், குறிப்பா எதற்கு சொல்லுகிறேன் என்றால் பாஜவுக்கு ஓட்டு போடாதீர்கள், இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்னாள் தமிழக மக்களை பார்த்து பேசும் போது, வரக்கூடிய தேர்தல் இரண்டாவது சுதந்திர தேர்தல் என்று சொல்லி இருக்கிறார்.

தீப்பெட்டி, அச்சு தொழிலுக்கு 28 சதவீதம் GST வரி, ஒரு மாநிலத்திலிருந்து மக்களிடையே வசூல் செய்யும் ஒன்றிய அரசு, வெள்ளம் பாதிக்கும் போது தமிழக முதல்வர் நிவாரணம் கேட்கிறார் கொடுக்க மறுக்கிறது ஒன்றிய அரசு, மோடி தமிழக மக்களை மதிக்கவில்லை, மோடியிடம் கேள்வி கேட்ட கெஜ்ரவால் நிலைமை தான், கடந்த 9 ஆண்டுகளில் எத்தனை முறை டீசல்,பெட்ரோல் விலை ஏறி இருக்கிறது? என்று தெரியுமா?

மக்களிடம் வரிபணத்தை வாங்கி தனியாருக்கு கடனாக கொடுத்து தள்ளுபடி செய்த ,ஒரு மட்டமான அரசு என்றால் அது மோடி அரசு தான், இந்தியா அளவில் 70 சதவீதம் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் சிவகாசிக்கு ஏன் வட மாநில மக்கள் வரமாட்டார்கள், திருப்பூர், கோவை போல் வட மாநில மக்கள் ஆதிக்கம் ஆகிவிடும், குடியுரிமை சட்டம், நீட் சட்டங்களை யார் கொண்டு வந்தது, நம்பிக்கை துரோகி எடப்பாடி தான்.

படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாய தாமரை குளத்துக்கு நாசம், BJP தாமரை இந்த தேசத்திற்கு நாசம் என்று சொல்லி இண்டியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கதாகூருக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story