திருமுருகன்பூண்டியில் எல் முருகனை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பு

திருமுருகன்பூண்டியில் எல் முருகனை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பு

பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகனை ஆதரித்து நடிகை நமீதா திருமுருகன்பூண்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை ஆதரித்து நடிகை நமீதா திருமுருகன்பூண்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் நீலகிரி நாடாளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளர் எல் முருகனை ஆதரித்து நடிகை நமீதா, திருமுருகன் பூண்டி பேருந்து நிறுத்தத்தில், பா.ஜ.க வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி பொதுமக்கள் மத்தியில் திறந்த வெளி வாகனத்தில் இருந்தபடி வாக்குகளை சேகரித்தார்.

நடிகை நமீதா உரையாற்றுகையில் . நீங்கள் கடந்த முறை ஒரு எம்.பி யை தேர்ந்தெடுத்தீர்கள் அவர் பெயரை கூற நான் விரும்பவில்லை. நீங்கள் யார் என்று நன்கு அறிவீர்கள் நம்முடைய கலாச்சாரம், மண், நம் மக்களை, வணங்கும் கடவுளை, மிக அசிங்கமாக பேசி வருகிறார். நீங்கள் சொல்லுங்கள் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள். நமது வேட்பாளர் முருகன் நன்கு படித்தவர்.

மக்களின் கஷ்டத்தை நன்கு புரிந்தவர். உங்களுக்காக எப்பொழுதும் உயிரை கொடுத்து பாடுபடுபவர். சட்டத்தை நன்கு அறிந்தவர்.ஏழை மக்களுக்கு அதிக அளவில் உதவி செய்துள்ளார். கடந்த 45 வருடங்களாக மீனவர் சமுதாயத்திற்கு ஒரு அமைச்சர் வேண்டுமென வேண்டுகோள் வைத்ததற்கு,

நமது பாரத பிரதமர் மோடி ஜி மீனவர் சமுதாயத்திற்காக மூன்று அமைச்சர்களை நியமித்துள்ளார். அதில் முக்கியமானவர் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நமது வேட்பாளர் முருகன். நீங்கள் தைரியமாக முருகனை நம்பி தாமரைக்கு ஓட்டளியுங்கள். உங்களுக்காக எப்போதும் 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருப்பார். ஏனென்றால் தாமரை மலரும் தமிழ்நாடு வளரும். நமக்கெல்லாம் வாழ்க்கையில் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாய்ப்புகள் வரும் இந்த வாய்ப்பினை நாம் நன்றாக உபயோகப்படுத்த வேண்டும்.

நிச்சயமாக நமது கைவிரலில் நமது சின்னத்தை தேர்ந்தெடுக்கக்கூடிய நேரத்தில் உள்ளது. நிச்சயமாக நமது கை விரலில் உள்ள சக்தியை வைத்து ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டும். பத்து வருடத்திற்கு முன்பு இந்த நிலை இருந்ததா, நம் நாடு எப்படி இருந்தது, என சற்று நீங்கள் எல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவசியம் நாம் ஓட்டளிக்க வேண்டும் நம்முடைய வளர்ச்சிக்காகவும், நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ஓட்டளிக்க வேண்டும். 10 வருடத்திற்கு முன்னாடி நமது கைகளில் ஸ்மார்ட்போன் உபயோகமில்லை, ஆனால் இப்போது அனைத்து மக்களிடையே ஸ்மார்ட்போன் உபயோகம் அதிகரித்துள்ளது.

உங்களுடைய குழந்தைகள் வெகு தூரத்தில் படித்துக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய கல்வி கட்டணத்தை நொடியில் கட்டுவதற்கான வசதிகளை மேம்படுத்தும் விதமாக Gpay, Paytm போன்றவைகளை தொலைநோக்கு திட்டத்துடன் அறிமுகப்படுத்தியவர் நமது மோடிஜி. கடந்த 10 வருடங்களில் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பாடுபட்டு வரும் மோடிஜியால், விமான நிலையங்கள், கல்விக்கூடம், நெடுஞ்சாலைதுறை, ரயில்வே துறை, விளையாட்டு துறை, அறிவியல் துறை, என வந்தேபாரத் முதல் சந்திராயன் வரை நமது மோடிஜியால் மக்களுக்காக திட்டம் ஒதுக்கப்பட்டது.

கடந்த 2020இல் நடைபெற்ற சம்பவத்தை உலகமே மறந்திருக்காது.அதுவும் நாம் மறந்திருக்க மாட்டோம் நமக்காக கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தடுப்பூசியை கண்டுபிடித்து, கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழக மக்களுக்கும், மொழிக்கும் கலாச்சாரத்திற்கும், எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுப்பவராக நமது பாரத பிரதமர் உள்ளார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ் கலாச்சாரத்தை போற்றும் விதமாக செங்கோலை வைத்தவர் நமது மோடி ஜி இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story