அதிமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்!

அதிமுக  நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்!

 நடிகை விந்தியா 

திருப்பூர் மாஸ்கோ நகரில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆட்டுக்குட்டியை வைத்தே ரோடு ஷோ நடத்திய நம்மிடம் ரோடு ஷோவை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என திருப்பூரில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து நடைபெற்ற பரப்பரைக் கூட்டத்தில் நடிகை விந்தியா பேச்சு. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய அருணாச்சலத்திற்கு ஆதரவாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விஜயமங்கலம் , எஸ்வி காலனி மற்றும் மாஸ்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடிகையும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான நடிகை விந்தியா பரப்புரையில் ஈடுபட்டார். மாஸ்கோ நகர் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் தொழில்த்துறைக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்ததன் காரணமாக தொழில் துறை சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் 3 ஆண்டுகளாக விடியா அரசின் மின்கட்டணம் உயர்வு , குப்பை வரி உள்ளிட்ட வரி உயர்வுகளின் காரணமாக தொழில் துறை நலிவடைந்து இருப்பதாகவும் 3 ஆண்டுகளாக எந்த வளர்ச்சி திட்ட பணியை கொண்டு வராத திமுக தற்போது தேர்தலுக்காக பொய் பரப்புரைகளையும் பொய்யான விளம்பரங்களையும் அளித்து மக்களை ஏமாற்ற முயற்சித்து வருவதாகவும், அதுக்கு கொஞ்சமும் மாற்றமில்லாத பாஜக மக்களுக்கான வளர்ச்சித் திட்ட பணிகளைப் பற்றி எதையும் பேசாமல் பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை ரோடு ஷோ என்ற பெயரில் பொதுமக்களை பார்த்து வெறும் கையசைத்து செல்கின்றனர் கையை அசைத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள் அவர்கள் நினைப்பு தமிழகத்தில் செல்லாது. ரோட் சோவை பற்றி அண்ணாமலை அதிமுகவிற்கு பாடம் எடுக்கிறார். ஆனால் ஆட்டுக்கார அலமேலு படத்தில் மிகப் பிரபலமான ஆட்டை வைத்தும் பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் ஹிட்டான காரை வைத்து ரோடு சோ நடத்தியவர்கள் தமிழர்கள் என பேசினார். மூல பத்திரம் மோசடி திமுகவையும் தேர்தல் பத்திர மோசடி பாஜகவை ஒரு சேர தோற்கடித்து அதிமுகவை வெற்றி அடையச் செய்ய வேண்டும் என ஆதரவு திரட்டினார்.

Tags

Next Story