மனநல பாதிக்கப்பட்ட வடநாட்டு நபர் காப்பகத்தில் சேர்ப்பு !

மனநல பாதிக்கப்பட்ட வடநாட்டு நபர் காப்பகத்தில் சேர்ப்பு !

நாமக்கல்

குமாரபாளையம் மனநலம் பாதிக்கப்பட்ட வடநாட்டைச் சேர்ந்தவரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புறவழிச்சாலை மேம்பாலம் அடியில் மனநலம் பாதிக்கப்பட்ட வடநாட்டைச்சேர்ந்த நபர் போவோர் வருவோரை அச்சுருத்தியும் வந்துள்ளார் இந்ததகவல் சமுகவலைதளத்தில் பள்ளிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் கோட்டைமேடு தனசேகரன் அவர்கள் பகிர்ந்ததை பார்த்து மாவட்ட ஆட்சியர் திருமதி மருத்துவர் உமா அவர்கள் குமாரபாளையம் விடியல்ஆரம்பம் பவுன்டேஷன் நிறுவனத்திற்கு மனநலம்பாதிக்கப்பட்டவரை உரிய காப்பகத்தில் சேர்க்க அறிவுறுத்தியதின் பின்னிட்டு ராசிபுரம் அனைக்கு கரங்கள் காப்பகத்தில் உடனடியாக சேர்க்க கோரியதின் பேரில் காப்பக தொண்டு நிறுவன செவிலியர் தலைமையில் அழைத்துசெல்ல வாகனம் அனுப்பபட்டு பொதுமக்கள் மற்றும் காவல்நிலைய தலைமைகாவலர் முன்னிலையில் மனநலம்பாதிக்கப்பட்ட சுஜித் (40) என்பவரை மீட்டு பத்திரமாக அனுப்பபட்டது உடன் ஒன்றியகவுன்சிலர் தனசேகரன் விடியல்பிரகாஷ் நகர திமுக பொறுப்புகுழு உறுப்பினர் கே.ஏ.இரவி இலக்கியதளம் நாகு.அன்பழகன் பவானி தங்கராஜ் பஞ்சாலை சண்முகம் உதவும் கரங்கள் தீனா உடனிருந்தனர்.

Tags

Next Story