வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்-போக்குவரத்து கழகம் அறிக்கை

வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்-போக்குவரத்து கழகம் அறிக்கை

வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்-போக்குவரத்து கழகம் அறிக்கை

கோடை கால பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள போக்குவரத்து கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோவையில் இருந்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை,தேனி,திருச்சி சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழக கோவை மண்டலம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால சிறப்பு பேருந்துகள் கோவையிலிருந்து மேலே குறிப்பிட்டுள்ள வழித்தடங்களுக்கு முப்பது பேருந்துகளும் உதகைக்கு இருபது பேருந்துகளும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இருபது பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக கோவை மண்டல மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் அறிக்கை அளிக்கபட்டுள்ளது.

Tags

Next Story