ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலர் ஆய்வு

ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள்  குறித்து கூடுதல் தலைமை செயலர் ஆய்வு

ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் செம்பராம்பட்டு கிராமத்தில் ரூ.11 லட்சத்தில் புதிதாக குளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ் நேற்று ஆய்வு செய்தார். பின் செம்பராம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு சென்று கட்டடங்களின் உறுதிதன்மையை ஆய்வு செய்தார். பின் பள்ளி மாணவர்களிடம் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தரமாக உள்ளதா எனக் கேட்டறிந்தார்.இதை தொடர்ந்து கொசப்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ஏரிக்கரை பலப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார்.

Tags

Next Story