பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை - கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ

பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை - கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ
புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாவறை ஊராட்சியில் பள்ளிக்கல் என்ற இடத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் அலங்கார தரை கற்கள் அமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் சார்பில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ -விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அலங்கார கற்களை அமைப்பதற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து 23 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று, தற்போது நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய வகுப்பறை கட்டிடத்தை திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வாவறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சின்னப்பர், ஊராட்சி மன்ற தலைவர் மெட்டில்டா, மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் வென்சஸ்லாஸ், கிறிஸ்டல்பாய், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை - கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ

Tags

Next Story