பென்னகரில் ரூ.28 லட்சத்தில் கூடுதல் பள்ளிக்கட்டிடம்

பென்னகரில் ரூ.28 லட்சத்தில் கூடுதல் பள்ளிக்கட்டிடம்

பள்ளிகட்டிடம் 

பென்னகரில் ரூ.28 லட்சத்தில் கூடுதல் பள்ளிக்கட்டிடத்தை சேர்மன் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் பென்னகர் ஊராட்சி மருத்துவாம்பாடி கிராமத் தில் ரூ.28 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக்கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை,

இளம் வழுதி, மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த தாஸ், ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் புனிதவதிபாபு, கவுன்சிலர்கள் பத்மநா பன், பாண்டியன், லட்சுமி லட்சுமணன், ஏலக்கண்ணி, ஒன்றிய பொறியாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story