வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் அதிகார நந்தி சேவை

வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் அதிகார நந்தி சேவை

திருவீதியுலா 

செய்யாறு வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவ விழாவையொட்டி வேதபுரிஸ்வரர், பாலகுஜாம்பிகை அதிகார நந்தி வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் 9 ம் நாளில் வேதபுரிஸ்வரர் மற்றும் பாலகுஜாம்பிகை உற்சவ மூர்த்திகள் அதிகார நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story