சி.வி.சண்முகம் எம்.பி.யின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சி.வி.சண்முகம் எம்.பி.யின் வழக்கு  விசாரணை ஒத்திவைப்பு

பைல் படம்

சி.வி.சண்முகம் எம்.பி. மீதான 3 அவதூறு வழக்குகளின் விசாரணை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் பஸ் நிலையம் எதிரே கடந்த 10.3.2023 அன்றும், கோட்டக்குப்பம் நகராட்சி திட லில் கடந்த 1.5.2023 அன்றும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங் களும், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கடந்த 20.7.2023 அன்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக அரசையும், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக் கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மு கம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியம், தனித்தனியாக வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த 3 வழக்குகளும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜராகவில்லை. அவர் சார்பில் அ.தி.மு.க. முன்னாள் அரசு வக்கீல்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோர் ஆஜராகி சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர்.

மேலும் ஆரோவில், கோட்டக்குப்பம் வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டும், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டும், இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அந்த தடை உத்தரவு தொடருவதாக கூறி அ.தி.மு.க. வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இந்த 3 வழக்குகளின் விசாரணையையும் வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story