கோடநாடு கொலை கொள்ளை வழக்கு பிப்ரவரி 9 தேதிக்கு ஒத்திவைப்பு.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு பிப்ரவரி 9 தேதிக்கு ஒத்திவைப்பு.

நீதிமன்ற வளாகம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு பிப்ரவரி 9 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷனகான் மற்றும் விசாரணை அதிகாரி ADSP முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலிசார் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், வாளையாறு மனோஜ் , உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

குற்றம் சாட்டப்பட்ட பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரது செல்போன் தகவல் பரிமாற்றங்களை ஆய்வு செய்யவும், சாட்சிக விசாரணைக்கு சிபிசிஐடி போலீசாரால் கூடுதல் விசாரணைக்காக கால அவகாசம் கேட்டக்கப்பட்டதால் வழக்கை பிப்ரவரி 9ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.

Tags

Next Story