தாமிரபரணி கையெழுத்து இயக்கம் ஒத்திவைப்பு

தாமிரபரணி  கையெழுத்து இயக்கம் ஒத்திவைப்பு

பைல் படம் 

தாமிரபரணி கரைகளை பலப்படுத்த வலியுறுத்தி செய்துங்கநல்லூரில் நாளை தொடங்கவிருந்த கையெழுத்து இயக்கம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் அய்கோ சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், "தாமிரபரணி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி செய்துங்கநல்லூர் முதல் புன்னக்காயல் வரை குடியரசு தினத்தன்று மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டோம். தற்போது பொதுப்பணித்துறை அதிகாரி ஆதிமூலம், தொலைபேசி இணைப்பில் "இதே கோரிக்கைக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி விட்டதாகவும், மாவட்ட ஆட்சியரும் நிறைவேற்ற நடவடிக்கை ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குடியரசு தினத்தன்று செய்துங்கநல்லூரில் தொடங்கவிருந்த கையெழுத்து இயக்கத்தை தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story