தனியார் பள்ளிகளுக்கு இணையாக நோட்டீஸ் அடித்து மாணவர் சேர்க்கை

தனியார் பள்ளிகளுக்கு இணையாக நோட்டீஸ் அடித்து  மாணவர் சேர்க்கை

அரசு பள்ளி சார்பில் அடிக்கப்பட்ட நோட்டீஸ்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நோட்டீஸ் அடித்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் நூறாண்டுகளை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது, சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் சூழ்ந்த இயற்கையான இடத்தில் அமைந்துள்ளது.

மேலும் தமிழ் ஆங்கில வழி கல்வி மற்றும் ஆய்வகங்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ளது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.டி.பரந்தாமன் அவர்கள் சீறிய முயற்சியில் விளையாட்டு,

என்சிசி, யோகா,தேசிய பசுமை படை போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது தற்பொழுது தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நோட்டீஸ்கள் அச்சடித்து மாணவர்களின் சேர்க்கைக்கு விளம்பரம் செய்து குறிப்பிடத்தக்கதாகும்

Tags

Read MoreRead Less
Next Story