அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் 2024-ஆம் ஆண்டில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வரும் ஜூன் 07 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும், மாணவர்களுக்கு உதவிடும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் (8, 10, 12 ஆம் வகுப்பு), சாதிச்சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் (மாற்றுத்திறனாளிகள், விதவை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் முதன்மையானவர், தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவர்கள்), பாஸ்போர்ட் அளவுக்கு புகைப்படம் - 2, ஆதார் கார்டு ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி ஆகஸ்ட்-2024 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு தேர்ச்சி,10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை பயிற்சியில் சேரலாம். முன்னாள் ராணுவத்தினருக்கு 14 முதல் 45 வயது வரையும், மாற்றுதிறனாளிகளுக்கு குறைந்த பட்ச வயது 14 முதல் உச்சவரம்பு வயது இல்லை. 2020-2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் எட்டாம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய தொழில் பிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். சலுகைகள் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், இலவச பேருந்து பயண அட்டை, வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ750- வழங்கப்படும். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்விதிட்டத்தின்கீழ் ரூ.1000- மாதாந்திர கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் விவரம் பெற மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூர் அல்லது அருகிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது 9994043023, 9965342967, 9840950504 9442220049 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story