பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் மாணவர் விடுதியில் சேர்க்கை துவக்கம்

பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறையில் மாணவர் விடுதியில் சேர்க்கை துவக்கம்
பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறையில் மாணவர்களுக்கு 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தகுதியான மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம்
பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறையில் மாணவர்களுக்கு 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தகுதியான மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் /மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் நலத்துறையில் மாணவஃமாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 26 மாணவர்களுக்கானது மற்றும் 19 மாணவியர்களுக்கானது. கல்லூரி விடுதிகளில் 2 மாணவர்களுக்கானது . பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவஃமாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ/ மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ/ மாணவியருக்கு உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு இணைச் சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும் விடுதிகளில் சேருவதற்கான : பெற்றோர் /பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவஃமாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 01.07.2024-க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிகாப்பாளர் காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 31.07.2024-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் எதுவும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதிகளிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Tags

Next Story