அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் கைதான 11 பேரை காவலில் எடுத்து விசாரணை !

அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் கைதான 11 பேரை காவலில் எடுத்து விசாரணை !

அ.தி.மு.க. நிர்வாகி 

அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). அ.தி.மு.க. பகுதிச் செயலாளரான இவர் கடந்த 3-ந் தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் உள்பட 11 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவர்களை போலீசார் காவலில் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story