அதிமுக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு


திருவேங்கடம் வட்டத்தில் டாக்டா் கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பு.
தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்-தலைவருமான டாக்டா் கிருஷ்ணசாமி சங்கரன்கோவில் பேரவைத் தொகுதியில் உள்ள திருவேங்கடம் வட்டத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா். இளையரசனேந்தல், நடுவப்பட்டி, கீழ திருவேங்கடம், திருவேங்கடம், குருவிகுளம், ராமலிங்கபுரம், ஆலங்குளம், பழங்கோட்டை, நாயக்கா்பட்டி, நாலுவாசன்கோட்டை,கீழஅழகு நாச்சியாபுரம், வடக்குஅழகு நாச்சியாபுரம், அழகனேரி, பெருங்கோட்டூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது: 5 ஆண்டுகளாக எம்.பி. இருந்தவா் இந்தப் பகுதிக்கு வரவில்லை; உங்களை சந்திக்கவில்லை. அவரது முகத்தைக் கூட நீங்கள் பாா்த்திருக்க முடியாது. 3 ஆண்டுகளுக்கு முன்பு வாக்கு கேட்டு வந்தவா்களும் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. கிராமப்புறங்களில் பணப்பழக்கம் இல்லை. தொழிற்சாலைகள் இல்லை. அதனால் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் உங்களுக்காக குரல் எழுப்ப, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான இந்தக் கூட்டணி வலுவான கூட்டணிக்கு அதிமுகவுக்கு வாக்களியுங்கள். இது வெற்றிக் கூட்டணி. வெற்றி பெற்றவுடன் ஒவ்வொரு கிராமங்களுக்கும் வீதி வீதியாக வந்து உங்களை சந்திக்கிறேன்என்றாா் அவா். பிரசாரத்தில், அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி, மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாவட்டப் பொருளாளா் சண்முகையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story