அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பூத் கமிட்டி கூட்டம் 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர அதிமுக சார்பில், இளைஞர் இளம் பெண் பாசறை மற்றும் கழக மகளிர் அணி நிர்வாகிங்களுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நகர செயலாளர் அறிமுக கூட்டம் நகர செயலாளர் பூக்கடை சரவணன் தலைமையில் நடந்தது. மதுராந்தகம் ஜிஎஸ்டி ரோட்டில் அமைந்துள்ள ஆர்ஏ ஆர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான கழக அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய அதிமுக நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தாசலம்,மதுராந்தகம் நகரக் கழக அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story