பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்

 ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக,தேமுதிக. எஸ்டிபிஐ. புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சி சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக தேமுதிக. எஸ்டிபிஐ. புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர். இதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த சந்திரமோகனை அறிவித்தனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னால் அமைச்சருமான மு.பரஞ்சோதி தலைமையில் எதுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கழக நிர்வாகிகள் களப்பணி ஆற்ற வேண்டும்.கடந்த கால அதிமுக சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளை, வட்டம், வார்டு கழக நிர்வாகிகள் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story