திமுக மேயரை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

திமுக மேயரை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

அதிமுக

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கள்ளச்சாராயத்தால் 68 நபர்கள் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்க மறுப்பு தெரிவித்த திமுக மேயரை கண்டித்து அதிமுக எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சாதாரண மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி அவர்கள் வார்டுகளில் உள்ள தெருவிளக்கு, குடிநீர், பேருந்து நிலையத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போன்றவற்றை முன்னெடுத்து பேசினார், இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 68 பேர் கள்ளச்சாராயத்தால் பலியானதற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்ததற்கு திமுக மேயர் தினேஷ்குமார் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கூட்டத்திலிருந்து அதிமுகவினர் எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story