பத்திர எழுத்தர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர்கள் ரகளை

பத்திர எழுத்தர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர்கள் ரகளை

சிசிடிவி காட்சி 

காவேரிப்பட்டணம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பத்திர எழுத்தர் அலுவலகத்தில் புகுந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் அங்கிருந்த ஊழியர்களை அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் பாலக்கோடு சாலையில் பத்திரப்பதிவு எழுத்தர் ராஜதுரை என்பவர் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை, 11 மணியளவில் காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடியை சேர்ந்த, இளைஞர்கள், இளம்பெண் பாசறை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெரியசாமி(48) மற்றும் காவேரிப்பட்டணம் அ.தி.மு.க., நகர செயலாளர் விமல், (42) ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அலுவலகத்தில் ராஜதுரை இல்லை. அவரது அலுவலகத்தில் பணிபுரியும் திமுகவை சேர்ந்த ராஜசேகர் (39) என்பவரிடம் மொபைலை வாங்கி ராஜதுரையிடம் பேசி உள்ளனர். பின்னர் மொபலை தூக்கி எறிந்த அவர்கள், ராஜசேகரை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த ராஜசேகர் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில். அவர் அளித்த புகாரின் படி காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணையில், நில விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.,பிரமுகர்கள் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் நுழைந்து ரவுடிகளை போல் தாக்குதல் நடத்தியது சிசிடிவி காட்சியால் தெரியவந்துள்ளதது. மேலும் அ.தி.மு.க., நிர்வாகிகள், பத்திர எழுத்தர் அலுவலகத்தில் நுழைந்து ஊழியரை தாக்கும்‘சிசிடிவி’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags

Next Story