அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

துறைமங்கலத்தில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகரச் செயலாளர் ராஜ பூபதி வரவேற்புரை ஆற்றினார், நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சருமான மோகன் மற்றும் பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான இளம்பை தமிழ்ச்செல்வன், அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் அருணாச்சலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட துணைச் செயலாளர் சந்திரகாசி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் வாரிய தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் பூவை செழியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில், புதிதாக பொறுப்பேற்ற பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளமை தமிழ்ச்செல்வனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் அதிமுகவை ஜெயிக்க வைப்பதற்கானமுழு முயற்சிகளும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மேற்கொள்வதும் இதற்கான, பூத் கமிட்டி அமைத்து அதை வழி நடத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் அடுத்த முறையாக எடப்பாடி தலைமையிலான தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைப்பதற்கு கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் தொண்டர்கள் நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story