அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை தேர்தல் பிரசாரம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை தேர்தல் பிரசாரம்!

 பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை வேலூர் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிபிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நாளை (திங்கட்கிழமை) அரக்கோணம், வேலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேச உள்ளார். அரக்கோணம் தொகுதி சோளிங்கர், பாண்டியநல்லூரில் நாளை மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். அதைத்தொடர்ந்து வேலூரை அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பசுபதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.இதையொட்டி பாண்டியநல்லூர், கந்தனேரியில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story