குமாரபாளையத்தில் அ.தி.மு.க. ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அ.இ.அ.தி.மு.க சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், குமாரபாளையம் செங்குந்தர் மண்டபம் மற்றும் லட்சுமி மகால் ஆகிய இரு தனியார் திருமண மண்டபங்களில், நாமக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில அம்மா பேரவை இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான பிரபு பங்கேற்றார். கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட அ.தி.மு.க.வினரிடம், வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? யார் யாருக்கு என்னென்ன பணி? என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. குமாரபாளையம் நகர செயலர் மற்றும் கவுன்சிலர் பாலசுப்ரமணி, நகர துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் பழனிசாமி முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அர்ச்சுனன், சிங்காரவேல், வெங்கடேசன், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story