மரக்காணம் மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசாரம்.

மரக்காணம் மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசாரம்.
 அ.தி.மு.க. தெருமுனை பிரசாரம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து எண்டி யூர், சிங்கனூர் ஆகிய கிராமங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமலிஙகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் கரூர் சுந்தரம் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து பேசினார். இதில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் மணிமாறன். இலக்கிய அணி செயலாளர் பிரேம்குமார், மகளிர்அணி செயலாளர் கனக வல்லி, மாணவரணி செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் நந்தகுமார், தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் கந்தசாமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல்காதர், ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மன்னார், துணை தலைவர் மதிழ்செல்வி, கிளை செயலாளர் கட்டுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story