அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நியமனம்

அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நியமனம்
அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நியமனம்
அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.வின் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக திண்டிவனம் ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.பி பரிந்துரையின் பேரில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி திண்டிவனம் சஞ்சீவீராயன்பேட்டை பகுதியை சேர்ந்த எஸ்.இ.ஏழுமலையை அ.தி.மு.க.வின் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ஏழுமலை திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அப்போது முன்னாள் கவுன்சிலர் வடபழனி, வக்கீல்கள் சம்பத், செந்தில், சக்திவேல், தேவ.ஏழு மலை, ஞானவேல், இளங்கோ, அன்பு, கார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story