தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு அதிமுகவினர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபுவிற்கு தஞ்சை கிழக்கு மாவட்ட பாரதி மோகன் ஆலோசனைப்படி கும்பகோணத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலின் முன்பு அம்மா பேரவை மாநகரச் செயலாளர் கோட்டை அமீர் அயூப்கான் , மகாமகப் பகுதி கழக செயலாளர் ராஜி மற்றும் கூட்டணி கட்சியான SDPI மாநில பொறுப்பாளர் இப்ராகிம் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பள்ளிவாசலில் இருந்து தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய சகோதரர்களிடம் அதிமுகவிற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான கழகத் தொண்டர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story