அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

பொதுகூட்டம்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் நடந்தது. நல்லதம்பி எம். எல். ஏ. தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் வி. எஸ். குமரன், பேச்சாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர். பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கெங்கவல்லி ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜா, ராமசாமி, சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுரேஷ் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story