சிவகங்கையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து சிவகங்கையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் 

திமுக அரசை கண்டித்து சிவகங்கையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும், தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்

Tags

Next Story