அ.தி.மு.க., தெருமுனை பிரசாரக் கூட்டம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரக் கூட்டம்

வாக்கூரில் அ.தி.மு.க. தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.

வாக்கூரில் அ.தி.மு.க. தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூரில் நடந்தது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன் தலைமை தாங்கி னார். இளைஞரணி செயலாளர் குமரன், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜோதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் செண்பக செல்வி குமரன் வரவேற்றார்,

சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் காவேரி கலந்து கொண்டு தி.மு.க. ஆட்சியின் சீர்கேடு குறித்து கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுமதி நாகப்பன், முன் னாள் கவுன்சிலர் நரசிம்மன், லட்சுமணன், மாவட்டபிரதிநிதி ராஜாங்கம், நிர்வாகிகள் குமரன், முனுஆதி, தமிழ்செல்வன், ஜெய மூர்த்தி, ரவி, மகளிரணி பழனியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story