அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டத்தில் கஞ்சா போதையில் வாலிபர் ரகளை

அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டத்தில் கஞ்சா போதையில் வாலிபர் ரகளை
அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டத்தில் போதையில் வாலிபர் ரகளை.
செதி தொடர்பாளர் சசிரேகாவின் காரை வழிமறித்து ரகளையில் ஈடுப்பட்டார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டிவனம் எம்.எல்.ஏ. அர்ஜுனன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சசிரேகா கலந்து கொண்டு பேசினார். அப்போது கிடங்கல்-2-ஐ சேர்ந்த சரவணன் என்ற வாலிபர் கஞ்சா போதையில் கூட்டமேடையில் ஏற முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சரவ ணனை தடுத்து நிறுத்தினர். உடனே அவர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே கூட்டம் முடிந்ததும், புறப்பட்ட செய்தி தொடர்பாளர் சசிரேகாவின் காரை மறித்து சரவ ணன் ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் பிடித்து இழுத்துச் சென்றனர். சரவணன் மீது திண்டிவனம், ரோஷனை போலீஸ் நிலையங்களில் கஞ்சா, திருட்டு போன்ற வழக்குகள் உள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story