அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தென்பேர், எசாலம் கிராமங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணகுமார், ஒன் றிய துணை செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் சிலம்பரசன், பெரி யான் அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மகளி ரணி துணைச் செயலாளர் அமுதா கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார், இதில் ஒன்றிய தலைவர் பழனி, சார்பு அணி செயலாளர்கள் மணி, திருநாவுக்கரசு, கார்த்திகேயன், அண்ணாமலை, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், அன்பரசு, மகளிர் அணி பழனியம்மாள், கலையரசி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அந்துவான், கிளைச் செயலாளர்கள் வெற்றிவேல், வீரமுத்து, ராமச்சந்திரன், ஏழுமலை, செல்வம், சண்முகசுந்தரம் வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story