அ.தி.மு.க., தெருமுனை பிரசாரக்கூட்டம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரக்கூட்டம்
தலைவாசல் வடக்கு ஒன்றியம் வரகூர் ஊராட்சியில் அ.தி.மு.க., தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. 
தலைவாசல் வடக்கு ஒன்றியம் வரகூர் ஊராட்சியில் அ.தி.மு.க., தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் வடக்கு ஒன்றியம் வரகூர் ஊராட்சியில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். சேலம் புறநகர் அண்ணா தொழிற்சங்க கட்டுமான பிரிவு மாவட்ட செயலாளர் ராமசாமி வரவேற்று பேசினார். கட்சியின் தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, நல்லதம்பி எம். எல். ஏ. ஆகியோர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற் றாத தி.மு.க. அரசை கண்டித்தும். அ.தி.மு.க. ஆட்சி காலத் தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வராததை கண்டித்தும் பேசினர்.

Tags

Next Story