எம்.ஜி.ஆர் நினைவுதினத்தில் அ.தி.மு.க., வினர் அஞ்சலி

எம்.ஜி.ஆர் நினைவுதினத்தில் அ.தி.மு.க., வினர் அஞ்சலி

சேந்தமங்கலத்தில் எம்.ஜி.ஆரின்., 36வது நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க., வினர் அஞ்சலி

சேந்தமங்கலத்தில் எம்.ஜி.ஆரின்., 36வது நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க., வினர் அஞ்சலி
சேந்தமங்கலம், டிச. 24 சேந்தமங்கலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 36வது நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் அ.தி.மு.க., வினர் சேந்தமங்கலம் பழைய பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். சேந்தமங்கலம், காந்திபுரம், பேளுக்குறிச்சி, பொம்மசமுத்திரம், துத்திக்குளம், காளப்பநாயக்கன்பட்டி, அக்கியம்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர்., திருஉருவ படத்திற்கு மாலை அணிவத்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், நகர செயலாளர்கள் ஆனந்தகுமார், ராஜா, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகரன், மகளிர் அணி, ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட அ.தி.மு.க.,வினர் பலர் பங்கேற்று, எம்.ஜி.ஆர்., திருவுருவ சிலைக்கு மாலை அணிவத்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story