அதிமுக சார்பில் மக்களுக்கு குளுகுளு பானம்

அதிமுக சார்பில் மக்களுக்கு குளுகுளு பானம்

தண்ணீர் பந்தல்

முதுகுளத்தூரில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் மற்றும் ஒன்றிய கழகங்கள் சார்பில் நீர், மோர், இளநீர் மற்றும் தண்ணீர் பழம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்க முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே நீர், மோர் பந்தல் திறப்பு விழா நகர் கழக செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மத்திய ஒன்றியகழக செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் முன்னிலையில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தொடங்கிவைததார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் மு.சுந்தரபாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச்செயலாளர் கண்ணன், விளங்குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story