கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எ.டி.எம்.எஸ்.கே ஆறுதல்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 57 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை சந்தித்து அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சியின் நிறுவன தலைவர் நாதன் அறிவுறுத்தலின்படி அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இது போன்ற துயர சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story