தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் மாயம்

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் மாயம்

கோப்பு படம் 

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது 38). இவர் சேலம் அங்கம்மாள் காலனி கண்ணகி தெருவில் ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சத்தியநாதன் கடந்த 24-ந்தேதி அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி சுமிதா உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை.

இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியநாதனை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story