பேருந்து படியில் தொங்கி சாகசம் - மாணவர்கள் ஆபத்தான பயணம்

பேருந்து படியில் தொங்கி  சாகசம் - மாணவர்கள் ஆபத்தான பயணம்
பேருந்தில் சாகசம் செய்த பள்ளி மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளிக்கு தினம் தோறும் சிவாடா, என்.என்.கண்டிகை, அருங்குளம், கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அரசு பேருந்தில் பள்ளிக்குச் செல்கின்றனர். இந்நிலையில் அருங்குளத்தில் இருந்து திருத்தணிக்கு செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாரும்,மேற்கூரையில் அமர்ந்தும், ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடியும் சாகச பயணம் செய்து வருகின்றனர். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. காவல்துறையினர் பலமுறை கண்டித்தும் மாணவர்கள் தொடர்ந்து இந்த சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த பகுதிகளுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story