ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

வ.உ.சி. மார்க்கெட் செயலாக்கத்துக்கான சிறப்புக்குழு ஆலோசனை கூட்டம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடந்தது.


வ.உ.சி. மார்க்கெட் செயலாக்கத்துக்கான சிறப்புக்குழு ஆலோசனை கூட்டம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடந்தது.
சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் வ.உ.சி. மார்க்கெட் செயலாக்கத்துக்கான சிறப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பூ வியாபாரிகள் கூறியுள்ளனர். சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் பூ வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வ.உ.சி. செயலாக்கத்துக்கான சிறப்புக்குழுவை மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி தலைமையில் அமைத்துள்ளது. இந்த சிறப்புக்குழு ஆலோசனை கூட்டம் சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடந்தது. செயற்பொறியாளர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பூ வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பூ வியாபாரிகளிடம் இருந்து ஏற்கனவே கடை வைத்திருந்ததற்கான ஆவணங்களையும், மாநகராட்சிக்கு செலுத்திய வரி ரசீதுகளையும் பெற்றுக் கொண்டனர். பூ வியாபாரிகள் கொடுத்த ஆவணங்களை 7 பேர் கொண்ட குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். அவர்கள் அதனை பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்பார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

Tags

Next Story