ஆற்காட்டில் திருவாசகம் முற்றோதல்!

ஆற்காட்டில் திருவாசகம் முற்றோதல்!

வததராஜர் பெருமாள் கோயில்

கங்காதர ஈஸ்வரர் பெருந்தேவியார் உடனுறை வரதராஜபெருமாள் கோவிலில் 25-வது மாத திருவாசக முற்றோதல் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் பெருந்தேவியார் உடனுறை வரதராஜபெருமாள் கோவிலில் 25-வது மாத திருவாசக முற்றோதல் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஓம் அகத்தீஸ்வரர் அறக்கட்டளை நிறுவனர்கள் கே.கணேஷ், ஜெயலலிதா தலைமை தாங்கினனர். திருத்தேர் திருப்பணிக்குழு தலைவர் பொன்.கு.சரவணன் முன்னிலை வகித்தார். சென்னை சிவலோக திருமடம் திருவாசக பித்தர் வாதவூர் அடிகளார் கலந்து கொண்டு திருவாசகம் பாடினார். முன்னதாக கெங்காரம் மடத்திலிருந்து சிவனடியார்கள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிவனடியார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story