அகர்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து !

அகர்பத்தி தொழிற்சாலையில்  தீ விபத்து !

தீ விபத்து

நாட்றம்பள்ளி அருகே அகர்பத்தி தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அகர்பத்தி தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா மல்லப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட குட்டிகவுண்டனூர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேசவலு என்பவரின் மகன் ரங்கநாதன் வயது 58 என்பவர் அகர்பத்தி தயார் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணி அளவில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருப்பத்தூர் தீயணை வீரர்கள் விரைந்து வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

இருப்பினும் தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் தொழிற்சாலையில் இருந்த அகர்பத்தி தயாரிக்கும் மிஷின்கள்,மூலப்பொருட்கள் மற்றும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த அகர்பத்திகள் உள்ளிட்ட 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகி நாசமானது மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story