அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு பேரணி

அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு பேரணி

பைல் படம்

அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு பேரணி ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை - 12ம் தேதி வரை நடைபெறவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெயிட்டுள்ள தகவலில் 2024-ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு , இசை கலைஞர் தேர்வு பெங்களூரில் அமைந்துள்ள 7-வது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய இராணுவத்தால் ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை - 7ம் தேதி வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது.

இதற்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள். 02.01.2004 முதல் 02.07.2007 கால இடைவெளியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Keyboard, violin, piano உள்ளிட்ட பல்வேறு கருவிகளில் தேர்ச்சி பெற்ற இசை கலைஞர்களும் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் ரூ.100 ஆகும். இது ஒரு மத்திய அரசுப்பணி. மேலும் அனைத்து விவரங்கள் அறிய ஜுன்5 ம் தேதி வரை www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் அதிக அளவில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு பேரணிக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story