மல்லூர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு பயிற்சி

மல்லூர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு பயிற்சி

சேலம் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள், தென்னையை தாக்கும் நோய்கள் விளக்கம் அளித்தனர்.


சேலம் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள், தென்னையை தாக்கும் நோய்கள் விளக்கம் அளித்தனர்.

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்துடன் இணைந்து மாவட்ட ஊரக சந்தியூர் வேளாண் பணி அனுபவம் குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த ஆமணக்கு கரைசல் மேலாண்மை செய்முறையை விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.

அங்குள்ள விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டின் தாக்குதலால் ஏற்படும் அறிகுறிகள் பற்றியும், அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் சிற்றேடுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story