காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்

மாவட்ட ஆட்சியர் 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பிப்., 7 மற்றும் 28 ஆகிய தேதிகளில், நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் இரண்டில், 2023 - 24ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள, 55 கிராமங்களில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடைபெறும்.

மேலும், இந்த முகாம் பிப்., 7 மற்றும் 28 ஆகிய தேதிகளில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று, துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பெறும் வழிமுறைகள் பற்றி தெரிவிக்க உள்ளனர்.

எனவே, கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story