மழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு

கொல்லப்பட்டி, சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது இந்த மழையின் தாக்கத்தால் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் மற்றும் கழிவு நீர் நகரை தாண்டி கொல்லப்பட்டி, சாணார்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் சூழ்ந்துள்ளது இதனால் விவசாயம் செய்ய முடியாமல் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story