செய்யாறில் வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி

செய்யாறில் வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி

செய்யாறில் வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி

செய்யாற்றில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, கீழ்நெல்லி கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களின் சீரமைப்பு திட்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் உரங்களின் பயன்பாட்டை குறைத்தல், உயிர் உரங்கள், திரவ உயிர் உரங்களின் பயன்பாடு, தொழு உரம், மண்புழு உரம், மண்வளம் காத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story