கைகொடுத்த பருவமழை விவசாய பணிகள் மும்முரம்

கைகொடுத்த பருவமழை விவசாய பணிகள் மும்முரம்

கைகொடுத்த பருவமழை விவசாய பணிகள்மும்முரம்

விதை, உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோறிக்கை விடுத்துள்ளனர்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. இதில், களாம்பாக்கம், பாகசாலை, ஓரத்துார், கூளூர், மணவூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில், ஏரி குளம், குட்டைகள், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நெல் நடவு செய்ய, தங்களது நிலங்களை மாடு மட்டும் டிராக்டர் வாயிலாக உழுது வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, கடந்தாண்டு அறுவடை காலத்தில் நீர் பற்றாக்குறை நிலவியது. இந்தாண்டு நீர்நிலை நிரம்பி உள்ளதால், திருப்தியுடன் பணியை ஆரம்பித்து உள்ளோம். இந்த பருவத்தில் ஒன்றியத்தில், 1,200 ஏக்கர் நெல் பயிரிடப்படும். இந்த முறை கூடுதலாக, 300 ஏக்கர் பயிரிட நிலம் தயார் செய்யப்படுகிறது. விதை, உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story